/* */

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் தேர்தல் பணிகளை கலெக்டர் ஆய்வு

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மெகராஜ் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில்   தேர்தல் பணிகளை கலெக்டர் ஆய்வு
X

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்து, வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்களை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யும் பணிகள் குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின்னர் நடைபெறும் இப்பணிகளை விரைந்து முடிக்கவும் தொடர்ந்து தவறின்றி வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பதிவு செய்யுமாறும் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தப் பணியின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் மரகதவல்லி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்ட வருவாய் துறையினர் இருந்தனர்

Updated On: 1 April 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  2. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  3. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  4. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  5. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  6. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  8. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  9. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  10. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்