/* */

திதி கொடுக்க வந்த மின்துறை உதவியாளர் காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி பலி

குமாரபாளையத்தில், திதி கொடுக்க வந்த மின்வாரிய உதவியாளர், காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி பலியானார்.

HIGHLIGHTS

திதி கொடுக்க வந்த மின்துறை உதவியாளர் காவிரி   ஆற்றில் நீரில் மூழ்கி பலி
X

காவிரி ஆற்றில், தீயணைப்பு படையினர் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேட்டூரை சேர்ந்தவர் ரமேஷ், 45. மின்வாரிய உதவியாளர். இவர் தன் சித்தி சுப்புலட்சுமியின், காரியத்திற்கு குமாரபாளையம் வந்தார். நேற்று மாலை 03:30 மணியளவில் நகராட்சி அலுவலக காவிரி படித்துறையில், திதி மற்றும் பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விடுவதற்காக ஆற்றில் இறங்கினார்.

சிறிது தூரம் சென்றதும் தண்ணீர் இவரை இழுத்து சென்றது. நிலை குலைந்த இவர், நீரில் மூழ்கினார். இது குறித்து குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் வந்த படையினர், ரமேஷ் உடலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடி, சடலத்தை மீட்டனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 30 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...