/* */

நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு பரிசலில் சென்று கும்பாபிஷேகம் நடத்திய பக்தர்கள்

பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையம் காவிரி ஆறு நடுவில் அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் எனும் ஆதி விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு பரிசலில் கும்பாபிஷேக விழாவை பக்தர்கள் நடத்தினர்.

HIGHLIGHTS

நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு பரிசலில் சென்று கும்பாபிஷேகம் நடத்திய பக்தர்கள்
X

பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் காவிரி ஆறு நடுவில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழைமையான நட்டாற்றீஸ்வரர் எனும் ஆதி விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு பரிசலில் கும்பாபிஷேக விழாவை பக்தர்கள் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்தி பாளையம் கிராமத்தில், காவிரி ஆற்றின் நடுவில் ஸ்ரீ அருள்தரும் விசாலாட்சி அம்மை உடனமர், அருள்தரும் ஆதி விஸ்வேஸ்வரர் எனும் நட்டாற்றீஸ்வரர் கோவில் பாறைகளின் நடுவே அமைந்துள்ளது .

சுமார் 300 ஆண்டு காலம் பழமையான கோவிலாக கருதப்படும் இந்த கோவிலுக்கு, ஆவத்திபாளையம் காவிரி கரை ஓரத்தில் இருந்து நடு ஆற்றில்பரிசல் மூலமாக மட்டுமே செல்ல முடியும்.

இந்தக் கோவிலில் 108 சங்காபிஷேக விழாவுடன், கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பரிசல் மூலமாக கோவிலுக்கு வந்தடைந்தனர். கோவில் கலசங்களுக்கு சிறப்பு விசேஷ பூஜைகள்,கோவிலில் உப தெய்வங்களாக உள்ள சிவகாமி அம்மை உடனமர் ,ஆனந்த நடராஜர் சப்த கன்னிமார்கள், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்வுகள் நடைபெற்று, கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி, கைலாய வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் பாறைகளின் நடுவே உள்ள ஒரே கோவில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 Jan 2024 12:18 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்