Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
அபெக்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
புதிய தலைவராக பிரகாஷ், செயலராக கார்த்தி சபரி, பொருளராக சண்முகம், உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தி பேசினார்.
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தாருக்கு அரிசி மூட்டைகள், ஆதரவற்றோர் மையத்திற்கு அன்னதானம், மருத்துவ உதவி, கல்வி உதவி தொகை வழங்கப்பட்டன. நிர்வாகிகள் புருஷோத்தமன், ஈஸ்வர், மனோகர், சந்தானம், சம்பத், பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.