Begin typing your search above and press return to search.
அதிக ஆட்களை ஏற்றிச்செல்லும் மினி டெம்போ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை தேவை
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் மினி டெம்போ ஓட்டுனர்கள் அதிக ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர்.
HIGHLIGHTS
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் மினி டெம்போ ஓட்டுனர்கள் அதிக ஆட்களை ஏற்றிச்செல்வதை காவல்துறை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மினி டெம்போவில் அதிக ஆட்களை ஏற்றி செல்வதால் பாரம் தாங்காமல் பல இடங்களில் வேன் கவிழ்த்து விபத்து ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் பலமுறை போலீசார் எச்சரித்தும் தொடர்ந்து ஆட்களை ஏற்றி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நேற்று மினி டெம்போவை நிறுத்தி அதில் அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதனால் ஆட்டோ ஓட்டுனர்களும் தங்களுக்கு இதனால் வருமானமிழப்பு ஏற்படுவதாக புகார் கூறினார்கள். இது குறித்து போலீசார் மினி டெம்போ ஓட்டுனர்களிடம் எச்சரிக்கை விடுக்க வேண்டும்.