Begin typing your search above and press return to search.
நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர், விஷம் குடித்து தற்கொலை
குமாரபாளையத்தில், நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்த கூலி தொழிலாளி, விஷம் குடித்து உயிரிழந்தார்.
HIGHLIGHTS
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் அரிசிக்கடை வியாபாரம் செய்பவர் கவிதா, 42. இவரது கணவர் பாபு சங்கர், 47. இவர் ஈரோட்டில் பீஸ் மடிக்கும் வேலைக்கு சென்றுவந்துள்ளார். அவரது நண்பர் ஒருவர், பணம் கடனாக கேட்டதால், ஈரோட்டில் உள்ள ஒருவரிடம் பணம் கடனாக வாங்கி கொடுத்துள்ளார். கடனாக பணம் வாங்கியவர் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றினார்.
பணத்தை கடனாக கொடுத்த கூளக்கவுண்டர் மகன் கார்த்திக், 32, பாபு சங்கரை பணம் தரும்படி அடிக்கடி கேட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாபுசங்கர், உணவில் விஷம் கலந்து சாப்பிட்டுள்ளார்.உயிருக்கு ஆபத்தான நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.