Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் 3 மணி நேரம் பெய்த கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்
குமாரபாளையத்தில் 3 மணி நேரம் தொடர் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் கன மழை பெய்தது. இதனால் சேலம் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் சாலையில் ஒ.வி.கே. பெட்ரோல் பங்க், பஸ்கள் வெளியில் வரும் பகுதி, ஜே.கே.கே. பங்களா எதிரில், ஆனங்கூர் பிரிவு சாலை, சரவணா தியேட்டர் அருகில் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகாலில் சேர வழியின்றி குளம் போல் தேங்கி நின்றது. இதனால் சாலையில் சென்ற வாகனங்களால் தண்ணீர் தெறிக்க, அருகில் உள்ள வியாபார நிறுவனத்தார்கள், டூவீலர் மற்றும் நடந்து செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
மழை நின்ற பின் தேங்கிய மழைநீர் சேரும் சகதியுமாக மாறி, பெறும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. கோம்பு பள்ளத்தில் வெள்ளமென மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.