/* */

மதுரை அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம் டீ. கிருஷ்ணாபுரம் பகுதியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

மதுரை அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை
X

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே டீ. கிருஷ்ணாபுரத்தில் வசித்து வரும் காசி முருகன் இவரது மகன் சக்தீஸ்வரன். இவர், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சக்தீஸ்வரன் டீ. கிருஷ்ணாபுரம் அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து எம். கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்தீஸ்வரன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவர் சாவில் மர்மம் ஏதும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?