/* */

வைகை ஆற்றில் இறங்க வேண்டாம்: மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மக்கள் ஆற்றுக்குள் இறங்கவோ, மாடுகளை புற்கள் மேயவோ அனுப்ப வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

HIGHLIGHTS

வைகை ஆற்றில் இறங்க வேண்டாம்: மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
X

மதுரை கோரிப்பாளையம், கீழ் பாலம்.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்தது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் மூல வைகையில் தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 70.11அடியை எட்டியது. இதனையடுத்து, வைகை ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 6 ஆயிரத்து 885 ஆக உள்ளது.

தற்போது, வைகை ஆற்றில் 12,000 கன அடி நீர் சென்று கொண்டிருப்பதால் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் ஆற்றுக்குள் இறங்கவோ,மாடுகளை புற்கள் மேயவோ அனுப்ப வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் கீழ்பாலம், திருவேடகம் தடுப்பணை பகுதிகள், மேலக்கால் பாலம், சோழவந்தான் வைகையாற்று சனீஸ்வரன் கோயில் படித்துறை ஆகிய பகுதிகளில், போலீஸார் தடுப்புகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 1 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு