/* */

ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்பி கடிதம்

கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்

HIGHLIGHTS

ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக  பிரதமர் மோடிக்கு  காங்கிரஸ் எம்பி   கடிதம்
X

விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர்

தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை விற்பதற்கான ஏல நடைமுறையை இலங்கை அரசு கைவிட வேண்டுமென பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் (பொறுப்பு தெலங்கானா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு எழுதிய கடித விவரம்: 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விட முடிவு செய்துள்ள இலங்கை அரசின் நடவடிக்கைக்கு உங்களின் அன்பான தலையீடுகள் அவசர கால அடிப்படையில் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தின் ராமநாதபுரம்,(மண்டபம்) நாகப்பட்டினம், மண்டபம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்வதாகக் கூறி தமிழக மீனவர்களை மீன்பிடி படகுகளுடன் கைது செய்வது இலங்கை கடற்படையினரின் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் கடினமான காலங்களுக்குப் பிறகு தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், மத்திய அரசின் முயற்சியால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மீட்கப்படும் என்ற நம்பிக்கையில் தமிழக மீனவர்கள் உள்ளனர். ஏற்கனவே படகுகள் கைப்பற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள், தற்போது தங்கள் வாழ்வாதாரத்தின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழந்துள்ளனர்.

இலங்கை அதிகாரிகள் கடைப்பிடித்து வரும் ஏல நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக, தமிழக மீனவர் சங்கங்கள், வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி, இலங்கை அரசு படகுகளை ஏலம் விடுவதை நிறுத்தக் கோரி, மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து, போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. எனவே, கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்டு, பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்குமாறு அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 27 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’