/* */

தொண்டர்கள் என் பக்கம்: ஓ. பன்னீர்செல்வம் பெருமிதம்

Volunteers are behind me: O Panneerselvam is proud

HIGHLIGHTS

தொண்டர்கள் என் பக்கம்: ஓ. பன்னீர்செல்வம்  பெருமிதம்
X

மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம்

எனது எதிர்காலத்தை அதிமுகவின் உண்மை தொண்டர்களும் மக்களும் நிர்ணயிப்பார்கள் ஓபிஎஸ் பேட்டி.

அதிமுக கட்சியில் தொடர்ச்சியாக பல குளறுபடிகள் ஏற்பட்டு வந்த சூழலில் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்

புரட்சிதலைவர் எம்ஜிஆர்- புரட்சித்தலைவி ஜெயலலிதா உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். தொண்டர்களுக்காகவே நான் இருப்பேன். இரு பெரும் தலைவர்களும் கடந்த 50 ஆண்டுகாலம் மனிதாபிமானத்தோடு தமிழக மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று பல ஆண்டுகாலம் நல்லாட்சி நடத்தி இருக்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கிற இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது. எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டது என்பது குறித்து கூடிய விரைவில் மக்களே அவர்களுக்கு நல்ல தீர்ப்பினை வழங்குவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு தொண்டர்கள் உறுதியாக உரிய பாடத்தையும் தண்டனையும் வழங்குவார்கள் .

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்திலிருந்து என்னை யாராலும் நீக்க முடியாது. கடந்த 2002 -யில் மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சராக அரியணை ஏறுவதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இருக்கிறார்கள் அதில் பன்னீர்செல்வம் போன்ற ஒரு தூய தொண்டனை பெற்றது எனது பாக்கியம் என சான்றிதழ் கொடுத்து இருக்கிறார். இதை தவிர வேறு ஏதும் சான்றிதழை எனக்கு தேவையில்லை என நான் தெரிவித்துக் கொள்கிறேன். எனது எதிர்காலத்தை அதிமுகவின் உண்மை தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள் என்றார்.

Updated On: 28 Jun 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  2. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  3. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  4. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  7. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  8. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  9. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  10. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...