/* */

மதுரை அருகே கொரோனாவுக்கு பயந்து 2 பேர் தற்கொலை: 2 பேருக்கு தீவிர சிகிச்சை

கொரோனா தொற்று உறுதியானதால் மனம் விரக்தியடைந்த ஜோதிகா தனது தம்பிகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

HIGHLIGHTS

மதுரை அருகே கொரோனாவுக்கு பயந்து 2 பேர் தற்கொலை: 2 பேருக்கு தீவிர சிகிச்சை
X

பைல் படம்.

கொரானா அச்சத்தின் காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில் 2 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கல்மேடு பகுதி அருகே எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஜோதிகா. இவர் தனது தாய் மற்றும் தம்பிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இரண்டு நாள்களுக்கு முன்பு ஜோதிகாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மனம் விரக்தியடைந்த ஜோதிகா மற்றும் தனது தம்பிகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ,ஜோதிகா மற்றும் ரித்தீஸ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். மேலும் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, சிலைமான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 9 Jan 2022 9:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’