/* */

மதுரை விமான நிலையத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சி

மதுரை விமான நிலையத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி காட்டினர்.

HIGHLIGHTS

மதுரை விமான நிலையத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சி
X

மதுரை விமான நிலையத்தில் ,பேரிடர் மீட்பு குழுவினர்  ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

மதுரை விமான நிலையத்தில் அணுக்கதிர்வீச்சு மற்றுதம் ரசாயன பொருட்கள் நச்சு அபாயத்திலிருந்து பயணிகளை மீட்பது மற்றும் மருத்துவ முதலுதவி அளிப்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நடத்தினர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் சார்பில், மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில், பேரிடர் காலங்களில் அணுக்கதிர்வீச்சு, ரசாயன நச்சு பொருட்கள் அபாயத்தில் இருந்து பொதுமக்களையும் விமான நிலைய பணியாளர்களையும் எவ்வாறு துரிதமாக மீட்பது என்பது குறித்தும் மருத்துவ முதலுதவி அளிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாகாப்பு படை மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் துணை கமாண்டன்ட் சங்கேத் தலைமையில் தேசிய பேரிடர் மேலாண்மை துறை ஆணைய ஆலோசகர்கள் ரஜினேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் முதலுதவி மைய வீரர்கள் 45 பேர் பயற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், விமானநிலைய தொழிற் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் அதிகாரி விஸ்வநாதன் மற்றும் விமான நிலைய முதுநிலை மேலாளர் ஹரி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த ஒத்திகை பயிற்சியில் விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ துறை அலுவலர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


அணு கதிர்வீச்சுகள் ஏற்பட்டால், அவற்றிலிருந்து விமான பயணிகள் ஊழியர்களை எவ்வாறு மீட்பது மற்றும் பாதுகாப்பாக முதலுதவி வழங்கி மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது எப்படி? என, ஒத்திகை நடைபெற்றது.

விமான நிலைய தீயணைப்பு துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் குழு, மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் பங்கு பெற்ற மூன்று நாள் பயிற்சி முகாம் ஹோட்டலில் 2 நாட்களும், நிறைவு நாளான இன்று விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மைதானத்திலும் நடை பெற்றது.

Updated On: 14 March 2024 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...