எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து ஊர்வலம்
Protest against sale of LIC shares to private individuals
HIGHLIGHTS
மதுரை திருநகர் தனியார் மண்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தின் 66வது மாநாடு நடைபெற்றது.
மதுரை மாவட்டம், திருநகரில் நடைபெற்ற எல்.ஐ.சி. ஊழியர் சங்க மாநாட்டில் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை, தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டிப்பது அதன் பங்குகளை, 3 1/2 சதம் தனியாருக்கு வழங்கியதை கண்டித்தும்,மேலும், தனியாருக்கு பங்குகளை விற்பனை செய்வதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழாவிற்கு, அகில இந்திய தொழிற்சங்க தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார்.தொழிற்சங்க துணைத் தலைவர்கள் முத்துகுமாரசாமி, சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அகில இந்திய இன்சூரன்ஸ் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் வேணுகோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக, திருநகரில் உள்ள உள்ள எல்.ஐ.சி அலுவலகத்திலிருந்து பேரணி நடைபெற்றது. இதில் 70 பெண்கள் 200 பேர் கலந்துகொண்டனர்.