/* */

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்

நிகழாண்டில் நாட்டு மாட்டு இனங்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறவேண்டும் என்ற அடிப்படையில் சோதனைகள் நடைபெற்றன

HIGHLIGHTS

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்
X

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளையை பரிசோதித்து தகுதிச்சான்று வழங்கிய கால்நடைத்துறை அதிகாரி

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடைத்துறையினர் தகுதி பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது.

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதனை செய்தனர். திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பரிசோதனை செய்யப்பட்டது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல்நாள் தை.பொங்கலன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம்.
இதனைத் தொடர்ந்து, பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதித்து சான்றிதழ் அளித்த பின்னரே, ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்படும்.இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் தகுதி பரிசோதனை திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.

கால்நடை மருத்துவர் சிவக்குமார் தலைமையில் கால்நடை ஆய்வாளர் உள்பட 7 பேர் கொண்ட கால்நடைத்துறை குழுவினர், மாட்டின் உயரம் ,கொம்பு சீவி இருத்தல் கூடாது, கொம்பு இடைவெளி, திமில் , மாட்டின் கண் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு உடல்தகுதி ஆகியவை பரிசோதனை செய்தனர்.

நிகழாண்டில், நாட்டு மாட்டு இனங்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறவேண்டும் என்ற அடிப்படையில் பல சோதனைகள் நடைபெற்றன. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ஜல்லிக்கட்டு மாடுகளுக்கான உயரம் 120 சென்டி மீட்டர் ,கொம்பு கூர்மையாக இருக்க கூடாது, கண்பார்வை, கொம்பு இடைவெளி, உடற்தகுதி போன்றவை பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கு பெற வேண்டும் என விதி முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மாட்டின் புகைப்படம், மாட்டின் உரிமையாளர் ஆதார் கார்டு போன்றவை சரிபார்க்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கால்நடைத்துறை சார்பில் பரிசோதனை செய்தபின் சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழ் வழங்கப்பட்ட மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஜனவரி 14ம் தேதி அன்று மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் என கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 5 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  6. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  7. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  9. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  10. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்