/* */

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய நபரால் மதுரையில் பரபரப்பு

மதுரை பரம்பு பட்டியில் நாட்டு துப்பாக்கியுடன் சென்ற நபரால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய நபரால் மதுரையில்  பரபரப்பு
X

மதுரை பெருங்குடி பரம்புப்பட்டியில், நாட்டு துப்பாக்கியுடன் மர்ம நபர் சுற்றி வருவதாக, அப்பகுதி மக்கள் பெருங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் பெருங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்களுடன் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

விசாரணையில் பரம்புப்பட்டி, மேலே தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன் வயது(24)என்பது தெரியவந்தது. கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து, அவர் கையில் இருந்த 5 அடி நீளமுள்ள நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 23 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  2. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  3. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  4. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  7. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  8. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  9. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  10. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...