Begin typing your search above and press return to search.
மதுரை அருகே காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
திருப்பரங்குன்றத்தில் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
திருப்பரங்குன்றத்தில் காவல் துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து, வாகன ஓட்டிகளிடம் நோட்டீஸ் வழங்கி வாசிக்கச் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள், இளைஞர்கள் என, அனைவரையும் ஓரமாக நிற்க வைத்து, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து, ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன், தலைமையில் போலீஸார் வாசிக்கச் செய்து, உறுதிமொழி எடுக்க வைத்து அறிவுரைகள் கூறி அனுப்புகின்றனர்.