Begin typing your search above and press return to search.
தொழில் நுட்பக்கோளாறால் ஏர் இந்தியா விமானம் மதுரையில் தரையிறக்கம்
தொழில் நுட்பக்கோளாறு காரணமாக, ஏர் இந்தியா விமானம் மதுரையில் தரையிறக்கப்பட்டது.
HIGHLIGHTS
மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பை செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், பகல் 2 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட தயாராகி விமான நிலைய ஓடுபாதை செல்லும்போது, தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான நிலைய ஊழியர்கள் ஓடுபாதைக்குச் சென்று விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து, இதனால், ஒன்றரை மணிநேரம் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஐ பெரியசாமி உள்ளிட்ட 122 பயணிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.