/* */

சோழவந்தான் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்துக்கு வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்

HIGHLIGHTS

சோழவந்தான் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு
X

பைல் படம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் .

அப்பொழுது ரயில் நிற்கும் இடம் அலுவலகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வு மேற்கொண்ட போது சோழவந்தான் கிராம பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.மனுவில், சோழவந்தான் ரயில் நிலையத்தில் கிரேட் சி அல்லது கிரேட் டி தரத்திற்கு உயர்த்த வேண்டும் .1972 ஆம் ஆண்டு முதல் சோழவந்தான் ரயில் நிலையம் நின்று சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலை கடந்த 2008ஆம் ஆண்டு நிறுத்திவிட்டனர் .

அதனை மறுபடியும் பயணிகள் வசதிக்காக சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை ரயிலையும் ராமேஸ்வரம் திருப்பதி விரைவு இரயிலை சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சோழவந்தான் கிராம பொதுமக்கள் முன்வைத்தனர்.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட தென்னக ரயில்வே பொது மேலாளர் உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Updated On: 13 Dec 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  8. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  9. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  10. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா