Begin typing your search above and press return to search.
அலங்காநல்லூர் அருகே ரமலான் பெருநாள்: இனிப்பு வழங்கி கொண்டாடிய முஸ்லீம்கள்
ரமலான் பண்டிகையையொட்டி அங்குள்ள கரந்தமலை சுவாமி கோவில் முன்பாக ஊராட்சி மன்றத்தலைவர் அபுதாகீர் இனிப்பு வழங்கினார்
HIGHLIGHTS
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், அய்யூர் கிராமத்தில், ரம்ஜான் பண்டிகையையொட்டி மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அங்குள்ள கரந்தமலை சுவாமி கோவில் முன்பாக, ஊராட்சி மன்றத்தலைவர் அபுதாகீர் இனிப்பு வழங்கினார். இதில் ,இந்துகளும், இஸ்லாமியர்களும் கலந்துகொண்டனர். இதில், ஊர்நாட்டாமை கதிரேசன், நல்லாசிரியர் அப்பாஸ்.சந்திரன். கோவிந்தராஜ், ஜாமாத் செயலாளர் அப்பாஸ் மந்திரி, ஆசாத் , போஸ். மதுரை சலீம் ரியாஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.