/* */

சோழவந்தான் வடக்கத்தி, உச்சி மாகாளியம்மன் ஆலய பங்குனி திருவிழா

சோழவந்தான் வடக்கத்தி, உச்சி மாகாளியம்மன் ஆலய பங்குனி பெருந்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

சோழவந்தான் வடக்கத்தி, உச்சி மாகாளியம்மன் ஆலய பங்குனி திருவிழா
X

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் ஸ்ரீ வடக்கத்தி காளியம்மன் திருக்கோவில் பங்குனிஉற்சவ விழா பால்குடம் தீர்த்த குடம் எடுத்த பக்தர்கள்.

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் ஸ்ரீ வடக்கத்தி காளியம்மன் பங்குனிஉற்சவ விழா கடந்த ஐந்தாம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஆறாம் தேதி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இன்று காலை, வைகை ஆற்றில் இருந்து தீர்த்த குடம், பால் குடம் எடுத்து வரும் வைபவம் நடைபெற்றது. குலவையிட்டு சாமியாடி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர், சந்தனம், நெய், வெண்ணை உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை எம் வி .எம். குழுமத் தலைவர் மணி முத்தையா, 8வது வார்டு திமுக கவுன்சிலர் மருதுபாண்டியன், 13வது வார்டு கவுன்சிலர் எம். வள்ளிமயில் மற்றும் பூ மேட்டுத்தெரு கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

Updated On: 12 April 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை