/* */

அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் தாலிச்செயின் பறிப்பு

அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் தாலிச்செயினை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற  தலைவியின் தாலிச்செயின் பறிப்பு
X

அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற பெண் தலைவரிடம் தாலிச் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, அச்சம்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் ஸ்ரீசுதா முருகன். இவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் அலங்காநல்லூரில் இருந்து, அச்சம்பட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த இவரை கீழே தள்ளி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி செயின் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

இது தொடர்பாக, அலங்காநல்லூர் போலீசில் ஊராட்சி மன்றத் தலைவி ஸ்ரீசுதா முருகன் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு ப்பதிவு செய்து, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றவர்களை வலை வீசி தேடி வருவதுடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். செயின் பறிப்பு நிகழ்வால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Updated On: 17 April 2024 8:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு