/* */

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனார் கைது

மதுரை பாலமேடு பகுதியில் 15 வயது சிறுமிக்கு குடிபோதையில் பாலியல் தொந்தரவு செய்த கொத்தனார் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனார் கைது
X

மதுரை பாலமேடு அருகே வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியிடம் குடிபோதையில் அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்த கொத்தனார் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் முருகன் (34) இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் குடிபோதையில் அருகே வீட்டில் தனியாக இருந்த 15 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை அத்துமீறி பாலியல் தொந்தரவு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் பயந்து போன சிறுமி அலறி உள்ளர் . சிறுமியின் அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது கொத்தனார் செந்தில்முருகன் அங்கிருந்து தப்பியோட முயன்றார் . பொதுமக்கள் அந்த வாலிபர் செந்தில் முருகனை பிடித்து, பாலமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாலமேடு காவல் நிலைய போலீசார் சிறுமியுடன் வாக்குமூலம் பெற்று சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கொத்தனார் செந்தில் முருகன் மீது போக்ஸோ பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 23 Dec 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து