/* */

தாெடர் மழை எதிராெலி: சாேழவந்தான் பகுதிகளில் தக்காளி விலை கடும் உயர்வு

கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்து கிலோ நூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

HIGHLIGHTS

தாெடர் மழை எதிராெலி: சாேழவந்தான் பகுதிகளில் தக்காளி விலை கடும் உயர்வு
X

மதுரை மாவட்டம், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர்

கடந்த சில தினங்களாக பெய்து வரும்தொடர் மழை காரணமாக தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்து கிலோ நூறு ரூபாய்க்கு விற்கப்படும் இந்த நேரத்தில், போதிய விளைச்சல் இல்லாததால் வருமானம் இன்றி தவிப்பதாக தக்காளி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வியாபாரிகள் மூலம் தக்காளி கிலோ 40 ரூபாய்க்கு வாங்கிச் சென்று அவர்கள் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 120 ரூபாய்க்கு விற்பதாகவும், அதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். தொடர் மழை காரணமாகவும் தக்காளி செடியிலேயே அழுகும் நிலையில் இருப்பதால், போதிய விளைச்சல் இல்லாமல் வருமானம் இன்றி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு செய்தும் பத்தாயிரம் ரூபாய் கூட கிடைப்பதில்லை

கோடை காலத்தில்தான் தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கும் என்றும், ஆனால் அப்போது கிலோ விலை 5 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்கும் நிலை இருப்பதாகவும் ஆனால், மழை காலத்தில் விளைச்சல் இல்லாமல் இருப்பதால் மிகவும் வருமானம் இன்றி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அரசு நேரடியாக விவசாயிகளிடம் தக்காளியை ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கும் என்றும் வியாபாரிகள் மூலமும் இடைத்தரகர்கள் மூலம் உங்களைப் போன்ற விவசாயிகளுக்கு மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றன. ஆகையால், அரசு தானாக முன்வந்து விவசாயிகள் நேரடியாக தக்காளிகளை ஏற்றுமதி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Updated On: 12 Nov 2021 7:26 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு