/* */

மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து 770 மனுக்கள் பெறப்பட்டது

HIGHLIGHTS

மதுரையில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் மனு அளிக்கும் மக்கள்

மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ்சேகர் தலைமையில் இன்று (04.10.2021) நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் , மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம்; நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து 770 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

மேலும், 2 மாற்றுதிறனாளிகளுக்கு சிறுதொழில் செய்வதற்காக வங்கி கடன் மானியம் 1 பயனாளிக்கு ரூபாய் 25 ஆயிரம் என 2 பயனாளிக்கு ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையையும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்ற மாற்றுத்திறனாளி மூன்று சக்கர நாற்காலி வேண்டுமென்று மனு அளித்ததைத் தொடரந்து அந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அவருக்கு மூன்று சக்கர நாற்காலியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கோ.செந்தில்குமாரி , மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்ராஜ்குமார் , மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Oct 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  10. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...