/* */

மதுரை அருகே ஆனையூரில் டிச 21 -ல் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

வாரந்தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் முகாம் நடத்தப்படுகிறது

HIGHLIGHTS

மதுரை அருகே ஆனையூரில் டிச 21 -ல் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
X

பைல் படம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 1-ல் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது.

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும். அதில் உள்ளாட்சிப்பிரதிநிதிகள் உரிய கவனம் செலுத்தி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மாதம் தோறும் மற்றும் வாரம் தோறும் குறைகேட்கும் முகாம்களை நடத்தி வருகினறர்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளரிடமும், அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி ஆணையாளர்களிடம் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர். மேலும், மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட மனுக்களை தொடர்புடைய அலுவலர்கள் ஆய்வு செய்து நிறைவேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி, வரும் 21.12.2022 (புதன்கிழமை) ஆனையூர் பேருந்து நிலையம் அருகில் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 1 அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. (மண்டலம் 1 (கிழக்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.3 ஆனையூர்.

வார்டு எண்.4 பார்க்டவுண், வார்டு எண்.5 நாகனாகுளம், வார்டு எண்.6 அய்யர் பங்களா, வார்டு எண்.7 திருப்பாலை, வார்டு எண்.8 கண்ணனேந்தல், வார்டு எண்.9 உத்தங்குடி, வார்டு எண்.10 கற்பக நகர், வார்டு எண்.11 பரசுராம்பட்டி, வார்டு எண்.12 லூhர்து நகர், வார்டு எண்.13 ஆத்திக்குளம், வார்டு எண்.14 கோ.புதூர், வார்டு எண்.16 வள்ளுவர் காலனி, வார்டு எண்.17 எஸ்.ஆலங்குளம், வார்டு எண்.18 அலமேலு நகர், வார்டு எண்.19 கூடல்நகர், வார்டு எண்.36 மேலமடை, வார்டு எண்.37 பாண்டிகோவில், வார்டு எண்.38 சௌராஷ்ட்ராபுரம், வார்டு எண்.39 தாசில்தார் நகர், வார்டு எண்.40 வண்டியூர் ஆகிய வார்டு பகுதிகளைச் சேர்ந்த மக்கள்

இந்த குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில் வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 18 Dec 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  3. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  4. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  7. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  9. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  10. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...