Begin typing your search above and press return to search.
கருப்பாயூரணியில் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது
மதுரை அருகே கருப்பாயூரணியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கண்ணன் தெருவை சேர்ந்தவர் பாலேந்திரன் 51.இவர் கருப்பாயூரணி பாரதிபுரம் 6-வது தெருவில் நடந்து சென்றார். அப்போது ,அவரை வழிமறித்த வாலிபர் கத்திமுனையில் மிரட்டி, பாலேந்திரனிடம் இருந்து ரூபாய் ஆயிரத்தை பறித்து சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து, பாலேந்திரன் மாட்டுத்தாவணி போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட, கருப்பாயூரணி யைச் சேர்ந்த பூமிநாதன் மகன் கரண் (25) என்பவரை கைது செய்தனர்.