/* */

விபத்தில் இறந்த ரூபே கார்டுதாரர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கல்

கிருஷ்ணகிரி அருகே, விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு, காப்பீடாக ரூ.2 லட்சத்தை இந்தியன் வங்கி வழங்கியது.

HIGHLIGHTS

விபத்தில் இறந்த ரூபே கார்டுதாரர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கல்
X

கிருஷ்ணகிரி அருகே,  இந்தியன் வங்கி ரூபே ஏடிஎம் கார்டு வைத்திருந்து, விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு,  காப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார்(27). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி, விபத்தில் உயிரிழந்தார். இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள அகசிப்பள்ளி இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். அவர் ரூபே ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

ரூபே ஏடிஎம் கார்டு வைத்துள்ளவர்கள் விபத்தில் இறந்தால் மட்டும், காப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதற்காக வங்கியில் இருந்து எந்தப் பணமும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுவதில்லை.

அதன்படி, நவீன்குமார் விபத்தில் இறந்ததால், வாரிசுகளான அவரது தந்தை கோவிந்தன் மற்றும் தாய் கல்யாணி ஆகியோரிடம், இந்தியன் வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகையை வங்கி மேலாளர் சிவரஞ்சினி, காசோலையாக வழங்கினார்.

Updated On: 1 July 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  2. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  3. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  5. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  10. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...