Begin typing your search above and press return to search.
விபத்தில் இறந்த ரூபே கார்டுதாரர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கல்
கிருஷ்ணகிரி அருகே, விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு, காப்பீடாக ரூ.2 லட்சத்தை இந்தியன் வங்கி வழங்கியது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார்(27). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி, விபத்தில் உயிரிழந்தார். இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள அகசிப்பள்ளி இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். அவர் ரூபே ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி வந்துள்ளார்.
ரூபே ஏடிஎம் கார்டு வைத்துள்ளவர்கள் விபத்தில் இறந்தால் மட்டும், காப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதற்காக வங்கியில் இருந்து எந்தப் பணமும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுவதில்லை.
அதன்படி, நவீன்குமார் விபத்தில் இறந்ததால், வாரிசுகளான அவரது தந்தை கோவிந்தன் மற்றும் தாய் கல்யாணி ஆகியோரிடம், இந்தியன் வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகையை வங்கி மேலாளர் சிவரஞ்சினி, காசோலையாக வழங்கினார்.