/* */

மாம்பழ கூழ் ஆலைகள் சிண்டிகேட் அமைத்து கொள்முதல் செய்வதாக விவசாயிகள் புகார்

மாம்பழ கூழ் ஆலைகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

மாம்பழ கூழ் ஆலைகள் சிண்டிகேட் அமைத்து  கொள்முதல் செய்வதாக விவசாயிகள்  புகார்
X

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் உற்பத்தி செய்யப்பட்ட மாங்காய்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பூச்சி தாக்குதல் காரணமாக மா விளைச்சல் குறைவு - மாம்பழக்கூழ் ஆலைகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு மா கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்டத்தில் 54,000 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் மாவட்ட முழுவதும் மா சாகுபடி செய்யப்படுகிறது, இதில் சுவை மிகுந்த செந்தூரா, பங்கனப்பள்ளி, அல்போன்சா, மல்கோவா, பெங்களூரா, காதர், சர்க்கரை குட்டி, நீலம், போன்ற பல்வேறு ரகங்களில் மாங்கனிகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால் மா சாகுபடி கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றம் இயற்கை சீற்றம் நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு வறட்சியால் மகசூல் குறைந்துள்ள நிலையில் விலை சற்று அதிகரித்து இருந்தது. மாம்பழச்சாறு ஆலைகள் விவசாயிகளிடம் மா கொள்முதல் செய்து விற்பனை செய்தனர். கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக இந்த ஆண்டு மா மரங்களில் பூக்கள் அதிகரித்து இருந்தது. இதனால் மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்த்து நிலையில், பூச்சி தாக்குதலால் மாம்பூக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது மருந்துகள் அடித்தும் எந்த பயனும் இல்லை இதனால் இந்த ஆண்டு 90% மா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் வால்பேன் எனப்படும் ஒரு வகையான பூச்சி மா இலைகளையும் மா பூக்களையும் தாக்குவதால் மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 சதவீத மாங்காய் மட்டுமே உள்ளது. அந்த பத்து சதவீதத்திலும் தற்போது பெய்த மழையின் காரணமாக ஆலங்கட்டிகள் விழுந்ததில் இரண்டு சதவீதம் மாங்காய்கள் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் மா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மா விவசாயிகள் கூறுகையில்,மாவட்டத்தில் 74 பழச்சாறு ஆலைகள் இருந்த நிலையில் தற்போது 24 ஆலைகள் மட்டும் இயங்குகிறது இதில் பலர் ஆலை உரிமையாளர்கள் அவர்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு ,ஒரு டன் மங்காங்காய் 13,000 முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்வதாக கூறப்படுகிறது இதனால் ஏக்கருக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர். ஆகையால் மா விவசாயிகளின் நஷ்டத்தினை போக்கிடும் வகையில் தமிழக அரசு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கிட முன்வரவேண்டு மென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 25 May 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை