/* */

மாஸ்க் அணியவில்லை - நிலைய அதிகாரிக்கு அபராதம் விதித்த ரயில்வே...

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார்

HIGHLIGHTS

மாஸ்க் அணியவில்லை - நிலைய அதிகாரிக்கு அபராதம் விதித்த ரயில்வே...
X

ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில் நிலைய வளாகங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே துறை கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.

ரயில் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வழிகாட்டு விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை தெரிவித்தது. முகக்கவசம் அணிவது தவிர துப்புவது உள்ளிட்ட தொற்று பரப்பும் செயல்களை செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விதிமுறை அடுத்த 6 மாதங்களுக்கு இது நடைமுறையில் இருக்கும் என்றும் ரயில்வே கூறியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதத்தை தமிழக அரசு விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார் பகுதயில் அமைந்துள்ள டானுரோட் ரயில்நிலைய அதிகாரி ஷிரிஷ் குமார் ஜாதவ் மாஸ்க் அணியாமல் ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அவருக்கு ரயில்நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாஸ்க் அணியாத காரணத்திற்காக பொதுமக்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகாரிகளுக்கும் பொருந்தும் எனும் நோக்கில் ரூ .500 அபராதம் விதித்துள்ளனர். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Updated On: 14 May 2021 3:18 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது