/* */

ரூ.3.23 லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவைகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பறக்கும்படையினரால் ரூ.3.23 லட்சம் மதிப்பலான பட்டுப்புடவைகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ரூ.3.23 லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவைகள் பறிமுதல்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பறக்கும் படை அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் கிருஷ்ணகிரி & குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வரட்டனப்பள்ளி கிராமத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் குப்பம் மதனப்பள்ளியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சந்தானம் என்பவர் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 402 மதிப்பிலான 76 பட்டுபுடவைகள் இருந்தது தெரியவந்தது. இதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், இதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர், தேர்தல் நடத்தும் அலுவலர் பாக்கியலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

இதே போல், ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதியில் பறக்கும்படை அலுவலர் ரத்தினம் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 ஆயிரத்து 500 மதிப்பிலான குக்கர் உள்ளிட்ட உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 1 April 2021 5:52 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...