/* */

குளித்தலை அருகே டாஸ்மாக் பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர்

குளித்தலை அருகே டாஸ்மாக் பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

குளித்தலை அருகே டாஸ்மாக்  பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர்
X

குளித்தலை அருகே தாக்குதல் நடத்தப்பட்ட டாஸ்மாக் பார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நெய்தலூர் காலனியில் அரசு மதுபான கடை மற்றும் அரசு உரிமை பெற்ற பார் கடை செயல் பட்டு வருகிறது. இந்த பார் கடையை குடமுருட்டி நாகராஜ் என்பவர் உரிய அனுமதியுடன் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நச்சலூரை சேர்ந்த ராஜா, குழுமணியை சேர்ந்த மாற்று திறளாளி முத்து. நெய்தலூரை சேர்ந்த மாற்று திறளாளி பழனிவேல் ஆகியோர்கள் பணியில் இருந்தனர்.

அப்போது சேப்ளாப்பட்டி கிராமத்தை சேர்ந்த 10 க்கு மேற்பட்ட நபர்கள் மதுபான கடையில் மதுபாட்டில் வாங்கி வந்து. பார் கடையில் தின்பண்டம் கேட்டு தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் குடிமகன்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பாரில் வேலையில் இருந்த மூவரையும் மதுபாட்டிலால் தாக்கி, அரிவாள் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த திண்பண்டங்கள் கொட்டி சேதம் செய்தனர். மேலும் பாரில் குடிமகன்கள் மது அருந்தும் கட்டைகள். மற்றும் தடுப்புகளை சேதம் செய்தனர்.

இதுகுறித்து பார் உரிமையாளர் நாகராஜ் கொடுத்த தகவலின்படி குளித்தலை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து மூவர் இருசக்கர வாகனத்தில் வந்து அரிவாளை காட்டி தாக்க வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். அங்கு இருந்த பொது மக்கள் பார் உரிமையாளர், பணியாளர்கள் சேர்ந்து அதில் ஒருவரை பிடித்துவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதில் அவர் திருச்சி மாவட்டம் போசம் பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் வயது20 என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர்கள் கொண்டு வந்த அரிவாள், இருசக்கர வாகனத்தையும் போலீசார் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து பார் பணியாளர்கள் கொடுத்த புகாரின்படி குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு பாரில் வேலை செய்த மூன்று நபர்களை இதே பகுதியை சேர்ந்த நபர்கள் அரிவாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தி, பார் கொட்டகையை சேதம் செய்தனர். இது குறித்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

Updated On: 29 Dec 2021 3:41 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?