/* */

உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.4 லட்சத்து 94 ஆயிரம் பணம் பறிமுதல்

அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4,94,607 தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.4 லட்சத்து 94 ஆயிரம் பணம் பறிமுதல்
X

பைல் படம்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், ரூ.50,000க்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணமோ, பொருளோ கொண்டு செல்லக்கூடாது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 45 பறக்கும் படை குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அரவக்குறிச்சி பேரூராட்சி சின்னாக்கவுண்டனூர் பிரிவு, வீரமாத்தியம்மன் கோவில் அருகே ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் வீராசாமி தலைமையிலான பறக்கும் படையினர், வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதி வழியாக சென்ற காரில் சாந்தப்பாடியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ,4,94,607 கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கம்பிவேலி அமைப்பதற்கான கம்பி வாங்குவதற்கு பணத்தை கொண்டு செல்வதாக குறிப்பிட்ட கருப்பசாமியிடம் எந்த ஆவணங்களும் இல்லாததால் மேற்படி தொகை பறிமுதல் செய்யப்பட்டு, அரவக்குறிச்சி பேரூராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், செயல் அலுவலருமான செல்வராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.


Updated On: 4 Feb 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது