ரூ,1.50 கோடி வாடகை பாக்கி: பிளக்ஸ் பேனர் வைத்து இந்து சமய அறநிலையத்துறை அதிரடி
கோயில் நிர்வாகத்தில் திடீர் அறிவிப்பு பலகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது
HIGHLIGHTS
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வெண்ணைய்மலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் ஏற்கெனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யார், யார் வாடகை பாக்கி என்று கோயில் நிர்வாகத்தின் சார்பாக பிளக்ஸ் பேனர்கள் மூலம் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று அந்த கோயிலின் முன்பு சைக்கிள் நிறுத்தும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், இத்திருக்கோயிலுக்கு சொந்தமான காதப்பாறை கிராம்ம் புல எண் 269 ல் ஏக்கர், 7.81 செண்ட் இடத்திற்கு வாடகை பாக்கி அதிகம் வைத்துள்ளவர் விவரம் மற்றும் வரிசை எண்ணுடன் ஒரு வாடகைதாரர் நிலுவைத்தொகை 30-06-2022 முடிய ரூபாய் ஒரு கோடியே ஐம்பது லட்சத்து பதினாராயித்து இருநூற்றி முப்பத்தி மூன்று என்று எண்ணிலும், எழுத்திலும் எழுதப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பலகையால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது