/* */

கரூரில் 12 மணி நேரத்துக்கும் மேலாக எரியும் குப்பைக் கிடங்கு

குப்பைக் கிடங்கில் 12 மணி நேரமாக எரிந்து வரும் தீயை அணைக்க 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

கரூரில்  12 மணி நேரத்துக்கும்  மேலாக எரியும் குப்பைக் கிடங்கு
X

கரூர் குப்பை கிடங்கில் 12 மணி நேரமாக எரியும் தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்.

கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாங்கல் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை கிடங்கில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து மளமளவென பரவிய தீ குப்பை கிடங்கில் பெரும்பாலான பகுதியில் பற்றி எரிந்தது. தகவல் அறிந்து வந்த கரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினர் தீயை அணைக்க முயற்சி எடுத்தனர்.

தொடர்ந்து தீ அதிக அளவில் எரிந்ததால் உடனடியாக கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 5 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு 7 மணியில் இருந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். கரூர் நகராட்சிக்கு சொந்தமான லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு தீயை அணைக்க பெரும் முயற்சி எடுப்பதால் ஓரளவுக்கு தீ கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும், தொடர்ந்து புகை அதிக அளவில் வெளியேறுவதால் கரூர்-வாங்கல் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Sep 2021 7:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்