Begin typing your search above and press return to search.
தொடர் மழை எதிரொலி: கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவில் முதல் பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கரூர், அரவக்குறிச்சி, அணைப்பாளையம், பரமத்தி, கிருஷ்ணாபுரம், மாயனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இன்று காலையில் இருந்து லேசாக மழை குறைந்திருந்தாலும் மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு:
கரூர் 16 மி.மீ
அரவக்குறிச்சி 64 மி.மீ
அணைப்பாளையம் 36 மி.மீ
க.பரமத்தி 59 மி.மீ
குளித்தலை 37 மி.மீ
தோகமலை 80 மி.மீ
கிருஷ்ணராயபுரம் 44 மி.மீ
மாயனூர் 44 மி.மீ
பஞ்சப்பட்டி 20 மி.மீ
கடவூர் 21 மி.மீ
பாலவிடுதி 16 மி.மீ
மயிலம்பட்டி 10மி.மீ