/* */

காமிரா கண்காணிப்பை பலப்படுத்துங்கள்: செந்தில்பாலாஜி

காமிரா கண்காணிப்பை பலப்படுத்துங்கள்: செந்தில்பாலாஜி
X

கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் பின் பகுதியை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரசாந்த் வடநேரேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கரூர் சேலம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப் பட்டுள்ளன. இந்த கட்டிடத்தின் முன் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் பின்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படவில்லை.

பின் பகுதிக்குள் யாரேனும் சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் பின்பகுதியை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 11 April 2021 1:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...