/* */

பதுக்கிய மது பாட்டில்கள் - பறிமுதல்.

ஊரடங்கு காலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக..

HIGHLIGHTS

பதுக்கிய மது பாட்டில்கள் - பறிமுதல்.
X

ஊரடங்கு காலத்தில் விற்பதற்காக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருந்த 10 நபர்களை போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து 1,998 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது இதன் காரணத்தால் டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பதற்காக யாரேனும் மது பாட்டில்களை அதிக அளவில் வாங்கி பதுக்கி வைத்துள்ளனரா என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம் முழுவதும் ரகசிய தகவலின் அடிப்படையில் அரசு அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து ஊரடங்கு காலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக வைத்திருந்த 10 நபர்களை கைது செய்து , அவர்களிடமிருந்து 1,998 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.

குறிப்பாக வெங்கமேடு காவல் நிலையப் பகுதியில்,அருகம்பாளையம் என்ற இடத்தில் முருகேசன் என்பவருடைய வீட்டில் போலீசார் சோதனையிட்டதில் அங்கு பதுக்கி வைத்திருந்த 1,714 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு முருகேசன் கைது செய்யப்பட்டார்.

Updated On: 15 May 2021 3:10 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்