/* */

குமரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்: களை கட்டிய தோவாளை மலர் சந்தை

மலையாள வருட பிறப்பு மற்றும் ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு குமரி தோவாளை மலர் சந்தை களை கட்டியது.

HIGHLIGHTS

குமரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்: களை கட்டிய தோவாளை மலர் சந்தை
X

கேரளா மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை கடந்த 11 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது, வரும் 21 ஆம் தேதி திருவோண பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் 10 நாட்களும் தங்களை ஆண்ட மாமன்னர் மகாபலி சக்கரவர்த்தி தங்களை காண வருவார் என்பது ஐதீகம்.

அதன் படி கேரளா மக்கள் ஓணம் கொண்டாடப்படும் 10 நாட்களும் தங்கள் வீட்டின் முன் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்பார்கள்.

மேலும் மலையாள வருடப்பிறப்பான சிங்கம் ஆண்டு என்று அழைக்கப்படும் ஆவணி மாதம் இன்று தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தையில் விற்பனை அதிகரித்து உள்ளது.

அரளி, ரோஜா, ஜவ்வந்தி, மல்லி, பிச்சி என பலவகையான மலர்கள் தோவாளை மலர் சந்தையில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக மந்த நிலையில் காணப்பட்ட தோவாளை மலர் சந்தையில் தற்போது ஓணம் விற்பனை அதிகரித்து உள்ளதால் தோவாளை மலர் சந்தை களைகட்டி உள்ளது.

Updated On: 17 Aug 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  5. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  7. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  8. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  9. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  10. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு