/* */

சோதனை இல்லை, கண்காணிப்பும் இல்லை: குமரிக்கு காத்திருக்கும் பேராபத்து

கேரளாவில் இருந்து வருப்பவர்களிடம் சோதனை நடத்தப்படாததால், கன்னியாகுமரியில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

HIGHLIGHTS

சோதனை இல்லை, கண்காணிப்பும் இல்லை: குமரிக்கு காத்திருக்கும் பேராபத்து
X

கேரளாவில் இருந்து வருவோரை கண்காணிக்க, சோதனைச்சாவடியில் எந்த நடவடிக்கையும் இல்லை.

கேரளா மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. கேரளா மாநிலம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு நிபா வைரசும் மிரட்டி வருகிறது.

இந்நிலையில், தமிழக - கேரளா எல்லை சோதனைச்சாவடிகளில், சோதனை தீவிரப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அவ்வாறு சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படாதது, குமரி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நுழையும் 13 சாலை பகுதிகளில் சோதனைச்சாவடிகள் இருக்கும் நிலையில் பிரதானமான களியக்காவிளை சோதனை சாவடியை தவிர, வேறு எங்கும் சோதனைகள் நடைபெறுவது இல்லை. களியக்காவிளை சோதனைச்சாவடியிலும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் வாகன சோதனை மட்டும் நடைபெறுகிறது.

இதனல், பேருந்துகள், ஆட்டோ, இருசக்கர வாகனம் மூலம் ஏராளமானோர் எந்த தங்கு தடையும் இன்றி குமரி மாவட்டம் வந்து செல்வதால் குமரியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, அனைத்து சோதனைச்சாவடிகளிலும் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை கொண்ட குழு அமைத்து சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 8 Sep 2021 3:53 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  2. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  4. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  6. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  7. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  8. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  9. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!