/* */

குமரி-ரேஷன் கடைகளில் பூஞ்சைகள் நிறைந்த அரிசி விநியோகம்-பொதுமக்கள் வேதனை

குமரி மாவட்ட ரேஷன் கடைளில் பூஞ்சைகள் நிறைந்த அரிசி விநியோககிக்க படுவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குமரி-ரேஷன் கடைகளில் பூஞ்சைகள் நிறைந்த அரிசி விநியோகம்-பொதுமக்கள் வேதனை
X

தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் இன்று முதல் வழக்கம் போல் இயங்கும் என அரசு அறிவித்தது.

அதன் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் இன்று திறக்கப்பட்டன, ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் மக்கள் முடங்கிய நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் தவித்த மக்கள் ரேஷன் கடையில் திறக்கப்பட்டதும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்.

ஆனால் பெரும்பாலான ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்ட ரேஷன் அரிசியில் வண்டுகள் மொய்த்தும் பூஞ்சைகள் தாக்கியும் பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்த அரிசி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

பறக்கை செட்டி தெரு ரேஷன் கடையில் பூஞ்சைகள் நிறைந்த அரிசியை கண்டு பொதுமக்களில் பலர் அரிசியை வாங்காமல் திரும்பி சென்றனர், அரிசிக்கு பில் போட்ட சிலர் மட்டும் வேறு வழியின்றி பூஞ்சை நிறைந்த அரிசியை வாங்கி சென்றனர்.

இதே போன்று பெரும்பாலான ரேஷன் கடைகளிலும் பூஞ்சைகள் நிறைந்த அரிசி வினியோகிக்கப்படுகிறது, இந்நிலையில் ரேஷன் அரிசியை மட்டுமே நம்பி வாழும் குடும்பங்கள் கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத அரிசியை எப்படி சாப்பிடுவது என கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் அரசு பூஞ்சைகள் நிறைந்த இந்த அரசிகளை திரும்ப பெற்று தரமான அரிசியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 25 May 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?