Begin typing your search above and press return to search.
குமரியை குளிர்வித்த கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
கன்னியாகுமாரியில் திடீரென பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது, கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதனிடையே மாவட்டத்தில் நாகர்கோவில், தோவாளை, சுசீந்திரம், இரணியல், அருமநல்லூர், ஆரல்வாய்மொழி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது,
இந்த மழையின் காரணமாக வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.