/* */

நன்னீர் மீன் குஞ்சுகள் விற்பனை, குமரி ஆட்சியர் தகவல்

குமரி மாவட்டத்தில் நன்னீர் மீன் குஞ்சுகள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

நன்னீர் மீன் குஞ்சுகள் விற்பனை, குமரி ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது, குமரி மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டிலுள்ள சிற்றார்-2 நீர்த்தேக்கம் ஆலஞ்சோலை மீன் பண்ணையின் மூலம் தரமான நன்னீர் மீன் குஞ்சுகளை இருப்புச் செய்யப்படுகிறது.

மேலும் மீன் குஞ்சுகள் விரலிகளாக வளர்த்தெடுக்கப்பட்டு, பிரதி வாரம் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மீன் வளர்ப்போருக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எனவே மீன் வளர்ப்போர், மீன் பண்ணையாளர்கள் நன்னீர் மீன்குஞ்சு விரலிகளை அளவிற்கு ஏற்ப உரிய தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மீன் பண்ணை, சிற்றாறு-2 நீர்த்தேக்கம், லஞ்சோலை, குமரிமாவட்டம் என்ற முகவரியில் மற்றும் தொலைபேசி எண் 04652 227460 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் எனவும் ஆட்சியரின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 29 July 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...