/* */

Nagercoil Vigilance raid நாகர்கோவிலில்அரசு பணியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Nagercoil Vigilance raid நாகர்கோயிலில் மீன்வளத்துறையில் வேலை பார்க்கும் அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

Nagercoil Vigilance raid   நாகர்கோவிலில்அரசு பணியாளர் வீட்டில்   லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
X

நாகர்கோவிலில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Nagercoil Vigilance raid

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கேசவன்புதூர் அய்யா குட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள். இவர் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்து வந்தார்.இவரது மகன் மகேஷ். தந்தை இறந்ததையடுத்து இவர் பொதுப்பணி துறையில் உதவியாளராக சேர்ந்தார். தற்பொழுது மகேஷ் அயலகப் பணியாக மீன்வளத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 2013 முதல் 2022 ஆண்டு வரை காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2½ கோடி சொத்து சேர்த்ததாக புகார் வந்தது.இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மகேஷ் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று காலை ஏ.டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் சிவசங்கரி தலைமையிலான போலீசார் கேசவன்புதூர் அய்யா குட்டி நாடார் தெருவில் உள்ள மகேஷ் வீட்டிற்கு சென்றனர்.வீட்டில் மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டில் இருந்த ஆவணங்களையும் சோதனை செய்தனர். அப்போது 10 ஆண்டுகளில் 8 வீடுகள் கட்டியிருப்பதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளது. அந்த ஆவணங்களை வைத்து மகேஷிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.வீடுகள் எந்த பணத்தில் கட்டப்பட்டது என்பது குறித்த விவரங்களை கேட்டு அறிந்தனர்.

மகேஷின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்தனர். அவரது சம்பளத்தை விட அதிகமான அளவிற்கு வருமானம் சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.காலை 7.15 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் வரை நீடித்தது. மகேஷ் எங்கெல்லாம் வீடு கட்டியுள்ளார் என்பது குறித்த விவரங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகர்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சார்பதிவாளர் ஒருவர் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Updated On: 17 Nov 2023 9:47 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!