/* */

வரி செலுத்த வரும் 31 ஆம் தேதி கடைசி நாள் - கடும் நடவடிக்கையை தடுக்க மாநகராட்சி அறிவுறுத்தல்.

வரும் 31 ஆம் தேதிக்குள் வரிசெலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நாகர்கோவில் மாநகராட்சி அறிவுறுத்தல்

HIGHLIGHTS

வரி செலுத்த வரும் 31 ஆம் தேதி கடைசி நாள் - கடும் நடவடிக்கையை தடுக்க மாநகராட்சி அறிவுறுத்தல்.
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பொதுமக்கள் 2021-2022ம் நிதியாண்டிற்கு நாகர்கோவில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணங்கள் தொழில் வரி மற்றும் மாநகராட்சி கடை வாடகை செலுத்துவதற்கு இம்மாதம் மார்ச் 31 கடைசி நாள் ஆகும்.

ஆனால், நாகர்கோவில் மாநகராட்சியில் இதுவரை குறைந்த அளவில் மட்டுமே வரி வசூல் நடைபெற்று உள்ளன.ஆகையால் இன்று முதல் வரி பாக்கி வைத்துள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளும் ஜப்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

பொதுமக்கள் வரி செலுத்த எதுவாக நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் 5 சிறப்பு கவுண்டர்களும், வடசேரி பேருந்து நிலையம், வடிவீஸ்வரம், கிருஷ்ணன்கோவில், இடலாக்குடி, மறவன்குடியிருப்பு, எறும்புகாடு, ஆசாரிபள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள வரிவசூல் மையங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

மேலும் அனைத்து மையங்களிலும் கிரெடிட் கார்ட் / டெபிட் கார்ட் மூலமாகவும் பணம் செலுத்தலாம், மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் ஆன் லைன் மூலமாகவும் பணம் செலுத்தலாம்.இணையதளம் மூலமாக பணம் செலுத்துவதற்கு www.nagercoilcorporation.in என்ற இணையதள முகவரியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 26 March 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  2. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  4. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  6. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  7. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  8. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  9. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!