/* */

போக்குவரத்து விதிமீறல்: குமரியில் ஒரே நாளில் 4669 நபர்கள் மீது வழக்கு

குமரியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 4669 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

போக்குவரத்து விதிமீறல்: குமரியில் ஒரே நாளில் 4669 நபர்கள் மீது வழக்கு
X

குமரியில் வாகன சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது பாேலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும், அதிக பாரம் ஏற்றி, போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்வதால் விபத்துக்கள் அதிகரிப்பது கள ஆய்வில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களால் விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி குமரியில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லை பகுதிகளிலும் போலீசாரின் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அதன்படி நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம் இன்றியும், உரிய ஆவனங்கள் இன்றியும், அதிக பாரம் ஏற்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 4669 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரியில் கடந்த 70 நாளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிட தக்கது.

Updated On: 3 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை