/* */

ஒரேநாளில் 19 குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணை வழக்கு: போலீஸ் அதிரடி

குமரியில், ஒரே நாளில் குற்றவாளிகள் 19 பேர் மீது, நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

ஒரேநாளில் 19 குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணை வழக்கு: போலீஸ் அதிரடி
X

கன்னியாகுமரி மாவட்டத்தில், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளின் செயல்களை தடுக்கும் வகையில், காவல்துறை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் படி காவல்துறை எச்சரிக்கையை மீறி குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள், போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அவ்வகையில், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தொடர் நடவடிக்கையாக ஒரே நாளில் 19 நபர்கள் மீது பிணை நிறைவேற்றபட்டு உள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டு வந்து, குற்றச்செயல்களை குறைப்பதோடு, அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

Updated On: 24 Sep 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவனம்
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்