குமரியில் ஒரே நாளில் 1779 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
குமரியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒரே நாளில் 1779 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாகனங்கள் விதிமிறைகளை மீறி அதிக வேகத்துடன் வருவதால் விபத்துகள் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது
இதனைத்தொடர்ந்து அதிக பாரம் மற்றும் அதி வேகத்துடன் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்கை பகுதிகளிலும் போலீசாரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
அதன்படி நடைபெற்ற வாகன சோதனையில் ஒரே நாளில் தலைக்கவசம் இல்லாமலும் உரிய ஆவணங்களும் இல்லாமலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஒட்டிய 1779 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
குமரியில் கடந்த 30 நாட்களில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.