/* */

குமரியில் பள்ளி மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

குமரியில் பள்ளி மாணவ மாணவிகளின் போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி காவல்துறை சார்பில் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமரியில் பள்ளி மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாள் புனித பிரான்சிஸ் அசிசி பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாள் புனித பிரான்சிஸ் அசிசி பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பூதப்பாண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகை ஏந்தி பேரணியாக சென்றனர். கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக நடைபெற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கி திட்டுவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளை வலம் வந்தது.

இந்த பேரணியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர். மேலும் போதை பொருட்கள் தடுப்பு எண்ணான 7010363173 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை குறித்த தகவல் அளிக்கும்படி வலியுறுத்தினார்.

Updated On: 20 April 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  2. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  6. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  7. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  9. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  10. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்