Begin typing your search above and press return to search.
ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா ..!
ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தினமும் ஏராளமானோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பாதிப்பானது மூன்றிலக்க எண்ணிக்கையாக மாறியிருக்கிறது. இந்நிலையில் தோவாளை பகுதியில் இன்று ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள்,தாய்,தந்தை என ஐந்து பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தோவாளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.